உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வழங்கியதற்காக ஜப்பானை ரஷ்யா எச்சரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு ரஷ்யா ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பிய பின்னர், ஜப்பானுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை ஜப்பான் வழங்கியதை ரஷ்யா விரோத செயலாக கருதுகிறது.
இதன் காரணமாக ஜப்பான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.