Site icon Tamil News

ஜெர்மனியில் உள் முரண்பாட்டை உருவாக்கும் ரஷ்யா : பகிரங்க குற்றச்சாட்டு!

ஜேர்மனியிற்குள் முரண்பாட்டை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு மத்திரி தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் அதிகாரிகள் உக்ரைனுக்கு உதவும் முகமாக டாரஸ் ஏவுகணைகைளை வழங்குவது குறித்து விவாதித்துள்ளனர். இந்த உரையாடல்களை ரஷ்யா கசியவிட்டுள்ளது. இந்நிலையிலேயே அவர் மேற்படி கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ், இது தற்செயலான நிகழ்வு அல்ல என விவரித்துள்ளார்.

புடின் நடத்தும் தகவல் போரின் ஒரு பகுதி இது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் இது எங்கள் ஒற்றுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version