Site icon Tamil News

தனது சொந்த கிராமத்திலேயே வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்திய ரஷ்யா!

ரஷ்யா தற்செயலாக உக்ரைன் அருகே உள்ள தனது சொந்த கிராமம் ஒன்றில் வெடிகுண்டு வீசியதை அதன் ராணுவம் உறுதி செய்தது.

தெற்கு வோரோனேஜ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலேயே குறித்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனவரி 2, 2024 அன்று, மாஸ்கோ நேரப்படி காலை 9 மணியளவில் (GMT), இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும்  ஆறு தனியார் வீடுகள் சேதமடைந்துள்ளதாகாவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சேதத்தின் தன்மையை மதிப்பிடுவதற்கும் வீடுகளை மீட்டெடுப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version