Site icon Tamil News

உக்ரைனின் உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்கிய ரஷ்யா : இருவர் பலி!

உக்ரைனின் மேற்கு லிவிவ் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏவுகணை தாக்குதலால் கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக ஆளுநர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் நூறாயிரக்கணக்கான மக்கள் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி 170,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை ரஷ்யாவினால் ஏவப்பட்ட 11 ஷாஹெட் வகை ஆளில்லா விமானங்களில் ஒன்பதையும், 14 குரூஸ் ஏவுகணைகளில் ஒன்பதையும் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

சமீபத்திய நாட்களில் உக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version