Site icon Tamil News

தென்னிலங்கையில் கடற் கரையோரங்களில் உல்லாசமாக இருந்து காதல் ஜோடிகள்!! இணையத்தில் வெளியான 75 காணொளிகள்

தென்னிலங்கையில் காதலர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்ட சந்தேக நபர் ஒருவரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி தடல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சந்தேக நபர் கடற்கரைக்கு அண்மித்து காணப்படும் புதர்களுக்கு அருகில் வரும் காதலர்கள் அருகில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இங்கே இருந்தால் பொலிஸ் பிடிப்பார்கள் என கூறி  காதலர்களை புதர்களுக்குள் அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் காதலர்கள் இஷ்டம்போல் நடந்து கொள்வதற்காக புதர்களுக்குள் இருட்டான இடங்களை அமைத்துக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அந்த இடங்களுக்குச் செல்லும் காதலர்கள் உடலுறவு கொள்ளுவதை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் இரகசியமாக வெளியிட்டு அவற்றை விற்று பணமாக்கியுள்ளார்.

சந்தேக நபரால் இதுவரை எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட காணொளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை வயதுக்குட்பட்ட மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இவ்வாறான இடங்களில் அவசர பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version