Site icon Tamil News

“தலைவா” என தமிழில் அழைக்கப்பட்ட ரோஜர் ஃபெடரர் – வைரலாகும் பதிவு

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் ‘தலைவா’ என தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டுள்ளார். ரோஜர் ஃபெடரர்தொடர்ந்து 302 வாரங்கள் உலகின் நம்.1 டென்னிஸ் வீரராக இருந்தவர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் 8 முறை விம்பிள்டன் கிண்ணத்தையும் வென்றிருக்கிறார். சர்வதேச டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர் சமீபத்தில் அனைத்து வகையான டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், ‘விம்பிள்டன்’ போட்டி நடைபெற்ற இடத்திற்கு குடும்பத்துடன் ரோஜர் ஃபெடரர் வந்திருந்தார். இதைப் பாராட்டும் விதமாக பல்வேறு பதிவுகளைப் பதிவிட்ட விம்பிள்டன் நிர்வாகம் தன் முகநூல் பக்கத்தில், ‘தலைவா’ என தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு ரோஜரின் புகைப்படத்தை இணைத்துள்ளனர். இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலையால், அனர்த்தம் அபாயம் மிகுந்த பகுதியில் வசிக்கும் மக்கள், அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version