Site icon Tamil News

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை குறிவைத்து ரொக்கெட் தாக்குதல்!

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. அதோடு,அய்ன் அல்அசா விமானப்படை தளத்திற்குள் பாரியவெடிப்பு சத்தங்கள் கேட்டன .

ஈராக்கிய படையினர் அந்த விமானதளத்தை மூடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளதுடன், உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் வெளியாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.அதேவேளை கடந்த வாரம் ஈரானிற்கு நெருக்கமான ஈராக்கிய குழுக்கள் ஹமாஸ்விவகாரத்தில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அமெரிக்காவின் நிலைகளை தாக்கப்போவதாக எச்சரித்திருந்தது.

ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க படையினர் அதிகளவு ஆளில்லா விமானதாக்குதலிற்கு உள்ளாகின்றனர் என தெரிவித்துள்ள பென்டகன், தாக்குதலிகளில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.அதோடு ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் இந்த தாக்குதல்களை மேற்கொள்கின்றன என பென்டகன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இஸ்ரேலை நோக்கி யேமனில் உள்ள ஹெளத்திபோராளிகள் ஏவிய குரூஸ் ஏவுகணையை அமெரிக்க யுத்தகப்பல் சுட்டுவீழ்த்தியுள்ளதாகவும் பெனடகன் தெரிவித்துள்ளது.

Exit mobile version