Site icon Tamil News

பாகிஸ்தானில் இடம்பெற்ற வீதி விபத்து; எழுவர் உயிரிழப்பு!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் இடம்பெற்ற வீதி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மன்சேராவில் சிற்றுர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றுர்ந்தின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என அந்நாட்டு காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version