Site icon Tamil News

பிரான்ஸில் கடுமையான நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

பிரான்ஸில் கடுமையான நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான கடும் வெயில் மற்றும் மழையின்மையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதில் மிகமோசமாக Isère பிராந்தியத்தின் வடபகுதி நகரங்கள் பத்திற்கும் மேல் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் பல பகுதிகள் மூன்று நாட்களிற்கு முன்னர் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த மூன்று நாட்களிற்குள் மழை பெய்யாவிட்டால், இந்தப் பகுதிக்கான குடிநீர் முற்றாகத் தீர்ந்து விடும் ஆபத்து உள்ளதெனவும் Amballon பகுதிக்கான நீர்க் குழாய்களில் குடிநீர் முற்றாகத் தடைப்பட உள்ளது.

மற்றைய பகுதிகளும் ஓரிரு நாட்களிற்குள் முற்றாகக் குடிநீர் இல்லாத நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்த உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version