Tamil News

ஆட்சியை இழக்கும் அபாயம்! இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு ரிஷி சுனக் கருத்து

இரண்டு இடைத்தேர்தல் தோல்விகளை சந்தித்தாலும், அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிபெற முடியும் என்று ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார்.

இந்த இடைத் தேர்தல் முடிவுகள் ரிஷி சுனக்கிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி அடைவது நிச்சயம் என்றே கூறுகிறார்கள்.

பிரித்தானியாவில் நடைபெற்ற மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்துள்ளது.

மேற்கு லண்டனில் உள்ள உக்ஸ்பிரிட்ஜ் தொகுதியில் மட்டும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றது.

இந்த தொகுதியில் கூட வெறும் 500 வாக்கு வித்தியாசத்தில் தான் ரிஷி சுனக் கட்சியால் வெல்ல முடிந்தது.

எஞ்சிய இரு தொகுதிகளில் லிபரல் ஜனநாயக கட்சி மற்றும் தொழில் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 3 தொகுதிகளை இழந்த பிரதமர் என்ற மோசமான சாதனையை ரிஷி சுனக் நூலிழையில் தவிர்த்தார்.

பிரித்தானியாவில் பொது தேர்தல் அடுத்தாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த இடைத்தேர்தல் தோல்வி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.அத்துடன் இந்நிலை நீட்டிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

 

Exit mobile version