காசா முனை, ஏமன், லெபனான் ஆகிய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏமனின் துறைமுக நகரமான ஹூடைடா மீது இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.
ஹூடைடா நகரில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கு, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக்கிடங்கு, மின் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 87 பேர் படுகாயமடைந்தனர்.
அதேபோல், காசா முனையின் நஸ்ரத் முகாம், ரபா உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல், லெபனானின் அட்லோன் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் ஆயுதக்கிடங்கை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.
ஒரேநேரத்தில் லெபனான், ஏமன், காசா என 3 பகுதிகளில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.