Site icon Tamil News

இந்தியாவில் மீண்டும் தீவிரமடையும் கோவிட தொற்று

இந்தியாவில் மீண்டும் கோவிட தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கேரளா மாநிலத்தில் நேற்று மாத்திரம் 300 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அத்துடன் தொற்றுறுதியானவர்களில் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைவடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த தொற்று குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் கேரள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version