Site icon Tamil News

வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களின் நெகிழ்ச்சி செயல்!

கொரியாவில் எதிர்பாராத விபத்திற்கு முகங்கொடுத்த கொரிய பிரஜை ஒருவரின் உயிரைக் காப்பாற்ற இலங்கை இளைஞர்கள் குழுவொன்று தீவிர முயற்சி எடுத்துள்ளது.

இலங்கையர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொரியாவில் பணிபுரியும் இலங்கையர் ஒருவரின் சிகிச்சைக்காக பணம் திரட்டும் நோக்கில் இந்த கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தென்கொரியாவின் நோக்ஸான் மைதானத்தில் இலங்கைத் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்திருந்த போட்டியின் போது, ​​அருகில் நின்றிருந்த லொறியில் கைத்தொழில் வேலைக்காக வந்த கொரியர் நாட்டவரின் தலை திடீரென லொறியின் முன் பகுதியில் மாட்டிக்கொண்டது.

விரைந்து செயற்பட்ட இலங்கையர்கள், கொரிய அவசர சேவையுடன் இணைந்து, விபத்தில் சிக்கிய கொரியரின் உயிரைக் காப்பாற்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைக் காட்டும் காணொளித் தொடர் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றது.

காப்பாற்றப்பட்ட கொரிய பிரஜையை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version