அஸ்ஸாம் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூட்டு நடவடிக்கையில், கடத்தப்பட்ட 52 இந்தோனேஷிய பறவைகள் மற்றும் விலங்குகளை மீட்டனர்.
மீட்கப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளில் கருப்பு லோரிஸ் பறவைகள், சிவப்பு மற்றும் நீல நிற லோரிஸ் , பாபிருசா ஸ்வைன் மற்றும் ஹார்ன்பில்ஸ் ஆகியவை அடங்கும்.
இவை ஹைலகண்டியில் அசாம்-மிசோரம் எல்லைக்கு அருகில் பறிமுதல் செய்யப்பட்டன, நடவடிக்கையின் போது இரண்டு கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் தடுப்புகளை உடைத்து நான்கு சக்கர வாகனம் ஓட முயன்றது.அதன்படி, வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, வாகனத்தை விரட்டிச் சென்று பிடித்தோம். வாகனத்தில் இருந்த இருவரை பிடித்து, பறவை இனங்களை மீட்டோம்.முதற்கட்ட விசாரணையில், இந்த இனங்கள் இந்தோனேசியாவை தளமாகக் கொண்டவை, ஆனால் நிபுணர்கள் உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று ஹைலகண்டி மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷமிர்தாபர் பருவா தெரிவித்தார்.
வன அதிகாரிகளின் கூற்றுப்படி, மீட்கப்பட்ட ஐம்பத்திரண்டு உயிரினங்களில் நாற்பத்திரண்டு சிவப்பு மற்றும் நீல லாரிஸ்கள், ஆறு கருப்பு லாரிஸ்கள், இரண்டு ஹார்ன்பில்கள் மற்றும் ஒரு பாபிருசா (இந்தோனேசிய பன்றிகள்) ஆகியவை அடங்கும்.
கைது செய்யப்பட்டவர்கள் மொய்னுதீன் அலி மற்றும் சம்சுல் ஹக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிலாய்பூர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.