Site icon Tamil News

பிரான்ஸ் தலைநகரில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடக்கு பகுதியில் தங்கியிருந்த அகதிகள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Pont de Flandres பகுதியில் இருந்து 150 பேரும் Pont de Stains பகுதியில் இருந்து 80 பேரும் என மொத்தம் 230 அகதிகள் வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்ததாகவும், இல் து பிரான்சுக்கு வெளியே அவர்கள் பல்வேறு தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சென்றவருட இறுதியில் இருந்து இந்த அகதி முகாம்கள் அகற்றும் பணி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே இன்றைய இந்த ‘வெளியேற்றம்’ இடம்பெற்றது.

அதேவேளை, கடந்த மூன்று நாட்களில் 500 அகதிகள் இல் து பிரான்சுக்குள் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version