Site icon Tamil News

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகள் மீட்பு!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடந்தவிருந்த ஒரு தொகை வலி நிவாரணி மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் நேற்று (05.02) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் குறித்த மாத்திரைகள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version