Site icon Tamil News

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காட்டு யானையொன்றின் சடலம் மீட்பு

வயல்வெளியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் யானையொன்றின் சடலம் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ வெருங்குளம் பகுதியிலுள்ள வயல்வெளி ஒன்றிலே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

யானையின் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யானை 10 தொடக்கம் 15 வயதுக்குட்பட்டது என வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

யானையின் பிரேத பரிசோதனை அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்தியர்களால் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்படவுள்ளது.

Exit mobile version