உலகின் அதிவேக டி20 போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை எஸ்தோனியாவின் சாஹில் சவான் பெற்றார்.
சைப்ரஸ் அணிக்கு எதிராக 27 பந்துகளில் அவர் சதம் அடித்தார்.
இதற்கு முன், உலகின் அதிவேக டி20 சதத்தை நமீபியாவின் ஜான்-நிகோல் லோஃப்டி ஈடன்ஜே பதிவு செய்தார்.
அவர் 33 பந்துகளில் சதம் அடித்தார், மேலும் அவரது உலக சாதனை 4 மாதங்கள் மட்டுமே நீடித்தது.
சைப்ரஸ் அணிக்கும் எஸ்டோனியாவுக்கும் இடையிலான இந்த போட்டி நேற்று (17) சைப்ரஸின் எபிஸ்கோபியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சைப்ரஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களைப் பெற்றது.
சைப்ரஸ் அணிக்காக 5 இலங்கை வீரர்கள் விளையாடுவது சிறப்பு.
புத்திக மகேஷ், மங்கள குணசேகர, சமல் சந்துன், அகில கலுகல மற்றும் சசித்ர பத்திரன ஆகியோர் அந்த வீரர்களாவர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எஸ்டோனியா அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றி பெற்றது.
அங்கு, சவான் 41 பந்துகளில் 6 பவுண்டரிகள், 18 சிக்சர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 144 ஓட்டங்களை எடுத்தார்.