Site icon Tamil News

இலங்கையில் பள்ளி தரங்களை குறைக்க பரிந்துரை

உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்களை வெளியிட்ட கல்வி அமைச்சு, பள்ளி தரங்களின் எண்ணிக்கையை 13ல் இருந்து 12 ஆகக் குறைக்கும் நோக்கம் கொண்டதாகக் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திற்கான 2023 ஆம் ஆண்டுக்கான முன்னேற்றம் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான திட்டங்களை முன்வைக்கும் போது அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுசில் பிரேமஜயந்தவினால் இது வெளியிடப்பட்டது.

இதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு குழந்தையும் 17 ஆண்டுகளில் பள்ளியை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்பள்ளிக் கல்வியானது 4 வயது, முதன்மைப் பிரிவு 1-5, இளைய பிரிவு 6-8 மற்றும் மூத்த பிரிவு 9 முதல் 12 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பாடசாலை அடிப்படையிலான மதிப்பீட்டில் குறிப்பிட்ட சதவீத புள்ளிகளையும் பரீட்சைகளில் குறிப்பிட்ட சதவீத புள்ளிகளையும் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ள அதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுபடுத்துவதற்கும் போட்டியை இல்லாதொழிப்பதற்கும் கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது.

மேலும், உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக, கல்வி அமைச்சு பொதுத் தரப் பரீட்சையை தரம் 10 இல் நடத்துவதற்கும், உயர்தரப் பரீட்சை தரம் 12 இல் நடத்துவதற்கும் முன்மொழிந்துள்ளது. O/Lக்கான பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version