Site icon Tamil News

இலங்கையில் 10 ஆம் தரத்தில் O/L தேர்வை நடத்த பரிந்துரை!

க.பொ.த பொதுத்தேர்வை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற தெரிவுக் குழு பரிந்துரைத்துள்ளதாக  நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் தலைவர் நீதி அமைச்சர்  விஜேதாச ராஜபக்ஷ நேற்று (21.07) இந்த விடயம் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு பதிலாக சுயாதீன உயர்கல்வி ஆணைக்குழுவை அமைக்க விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version