எந்த நேரத்திலும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 1000 கோடி ரூபா என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலே பொதுத் தேர்தலுக்கும் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்