Tamil News

“நாளை என்பது நிச்சயமில்லை” விபத்தில் சிக்கினார் ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் ’நமக்கு நாளை என்பது இருக்குமா என்றே தெரியாது, எனவே நம்மை நாம் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தற்போது பொலிவுட் முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பதும், பொலிவுட்டில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இந்திய அளவில் அவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்று உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, சில நாட்களாக எந்த ஒரு பதிவும் செய்யாத நிலையில் தற்போது அவருடைய புதிய பதிவில் தான் ஒரு சின்ன விபத்தில் சிக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன், ஆனால் சில மாதங்களாக சுறுசுறுப்பு இல்லாததற்கு காரணம் எனக்கு ஏற்பட்ட ஒரு சிறிய விபத்து தான். தற்போது நான் குணம் அடைந்து மருத்துவர்கள் சொன்னபடி ஓய்வெடுத்து வருகிறேன்.

நான் இப்போது குணமாகிவிட்டேன், மீண்டும் நான் சுறுசுறுப்பாக மாறும் கட்டத்தில் இருக்கிறேன், என்னுடைய செயல்பாடுகளை சிறப்பாக கையாள்வதில் நான் கவனமாக இருக்கிறேன் வாழ்க்கையில் உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வதற்கு முன்னுரிமை கொடுங்கள் .

வாழ்க்கை ஒரே ஒரு முறை தான் கிடைக்கும், நமக்கு நாளை என்பது கிடைக்குமா என்றே தெரியாது, எனவே தினமும் மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version