Tamil News

தேர்தலில் தமது செல்வாக்கை இழக்கும் ரணில் : சாணக்கியன் கருத்து!

ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஸவை களமிறக்கபோவதாக அச்சுறுத்தும் செயற்பாட்டையே பொதுஜன பெரமுன முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை  மடியில் வைத்துக்கொண்டிருப்பாரானால் ஜனாதிபதி அவரின் செல்வாக்கினை இழக்கும் நிலையேற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இருந்து பல்கழைக்கழகம் சென்ற மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்குவிப்பதற்கான நிதியுதவி வழங்கள் மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி நகர தலைவர் அ.கந்தவேள், வளைகுடா வானாம் பாடிகள் அமைப்பின் தலைவர் கர்ணன் மற்றும் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பல்கழைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version