Tamil News

சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கும் ரன்பிர் கபூர்..ஏன் தெரியுமா…!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் ரன்பிர் கபூர். பல வெற்றிப்படங்களை கொடுத்த ரன்பிர் கபூர் தன் அபாரமான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிரம்மாஸ்திரா என்ற படத்தின் மூலம் ரன்பிர் கபூருக்கு அலியா பட்டுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து நான்கு ஆண்டுகள் ரன்பிர் மற்றும் அலியா காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்தாண்டு திருமணமான இவர்களுக்கு ரஹா என்ற அழகாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

.இந்நிலையில் ரன்பிர் கபூர் தன் குழந்தைக்காக ஒரு முடிவை எடுத்துள்ளார். அதாவது ஆறு மாதத்திற்கு நடிப்பில் இருந்தும் சினிமாவில் இருந்தும் விலகி தன் குழந்தையுடன் நேரம் செலவிட இருப்பதாக ரன்பிர் கபூர் கூறியுள்ளார்.

அலியா பட் தொடர்ந்து நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளதால் ரன்பிர் கபூர் தான் குழந்தையுடன் இருக்க முடிவெடுத்துள்ளார். தற்போது தான் தன் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக பேச துவங்கியுள்ளதாகவும், இந்த நேரத்தில் தான் குழந்தையுடன் இருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார் ரன்பிர் கபூர். தற்போது ரன்பிர் கபூர் ரஷ்மிகாவுடன் இணைந்து அனிமல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் தன் குழந்தையுடன் நேரத்தை செலவிட ரன்பிர் முடிவெடுத்துள்ளார். தன் குழந்தையால் தன்னிடம் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், குழந்தைக்காக எது வேண்டுமானாலும் செய்வேன் என்றும் முடிவெடுத்துள்ளார் ரன்பிர்.

Exit mobile version