Site icon Tamil News

இராகலை – வயிற்று வலியால் அவதிப்பட்ட நபர்… எடுத்த விபரீத முடிவு!

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை மேற்பார்வை தோட்டத்தில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்றை இராகலை பொலிஸார் இன்று (19)மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான (61) வயதுடைய பொண்னையா நாகேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மிக நீண்ட நாட்களாக தனக்கு வயிற்று வலியென அவதிப்பட்டு வந்த நிலையில், தனது மூத்த மகனுடன் இன்று (19) காலை வைத்தியசாலைக்கு சென்று மருந்து பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய இவர், தனது வீட்டில் தனி அறையில் கயிற்றில் தொங்கியவாறு உயிரிழந்துள்ளார்.

அதேநேரத்தில் தனது இளைய மகனுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர் தன்னுயிரை மாய்த்து கொண்டாரா என்பது தொடர்பில் இராகலை குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.அத்துடன் வலப்பனை நீதிமன்ற நீதிபதியின் மரண விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version