Tamil News

ரஜினி 170 – ல் ‘பாகுபலி’ வில்லன்…. புதிய அப்டேட்

ரஜினிகாந்தின் 170வது படத்ததில் தெலுங்கு நடிகர் ராணா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய் பீம்’ இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

rajini

முதற்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ளது.

போலி என்கவுண்ட்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர்கள் நானி, பகத் பாசில், சர்வானந்த், நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் ‘பாகுபலி’ படத்தின் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதேபோன்று ‘சார்பட்டா’ நடிகை துஷாரா விஜயனும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version