Site icon Tamil News

ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் நிறைவேற்றப்பட்ட தூக்குத்தண்டனை!

வடக்கு ஆப்கானிஸ்தானில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இன்று (26.02) தலிபான்களால் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது கடந்த ஐந்து நாட்களில் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது தூக்குத்தண்டனையாகும்.

வடக்கு ஜவ்ஜான் மாகாணத்தின் தலைநகரான ஷிபிர்கான் நகரில் கடுமையான பனிப்பொழிவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

அங்கு கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் குற்றவாளியை துப்பாக்கியால் ஐந்து முறை சுட்டுக் கொன்றார் என்று நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான் கைப்பற்றியதில் இருந்து இது ஐந்தாவது பொது மரணதண்டனையாகும்,

Exit mobile version