Site icon Tamil News

சிங்கப்பூரில் 400 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கத் திட்டம்!

சிங்கப்பூரில் Deel நிறுவனம் தலைமை அலுவலகத்தைத் திறக்கவுள்ள நிலையில் 400 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மனிதவள நிறுவனமான Deel நிறுவனம், சர்வதேச நிறுவனங்கள் கேட்கும் எண்ணிக்கையிலும், அந்த நிறுவனங்கள் வரையறுக்கும் திறன்மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்து, சம்மந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறது.

Deel நிறுவனம் அனுப்பும் ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள், அதற்கான சேவைக் கட்டணங்களை Deel நிறுவனத்துக்கு வழங்குகின்றன.

அந்த வகையில், நிறுவனத்தின் ஆசிய- பசிபிக் தலைமையகத்தின் அலுவலகத்தை சிங்கப்பூரில் திறக்க Deel நிறுவனம் முடிவு செய்துள்ளது. அத்துடன், சிங்கப்பூர் அலுவலகத்தில் சுமார் 400 ஊழியர்களை, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் படிப்படியாக பணியில் அமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு குறைந்து வரும் சூழலில், Deel நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கை ஊழியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version