Site icon Tamil News

கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் அபாயம்!

நாட்டின் ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வருட ஆரம்பத்திலிருந்து பல்வேறு குற்றச் சாட்டுக்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகள் முன்னதாக சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது தீவு முழுவதும் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் சுமார் 29,000 நபர்கள் உள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில், ஏறக்குறைய 19,000 பேர் கைதிகள், மீதமுள்ள 10,000 பேர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற கைதிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலை நிறுவனங்களிலும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் போக்கு அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version