Site icon Tamil News

இலங்கையில் போதைப்பொருளுடன் சிக்கிய சிறைச்சாலை அதிகாரி!

ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலில் சிறைச்சாலை அவசர பதில் தந்திரோபாயப் படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரியை பரிசோதித்த போது, ​​அவரிடம் ஐஸ் என சந்தேகிக்கப்படும் சில போதைப்பொருள் பொதிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றை அந்த அதிகாரி தனது பணி காலணியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக சிறைச்சாலை ஊடகப் ​பேச்சாளரும் ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் சுமார் 20 வருடங்கள் சிறைச்சாலையில் பணியாற்றிய அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரளை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

Exit mobile version