Site icon Tamil News

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். 3வது முறை பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.

அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், தனது பயணத்தின் போது பிரதமர் மோடி சில முக்கிய இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.

இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்தது என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version