Site icon Tamil News

திட்டமிட்டப்படி உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும – பிரதமர் உறுதி

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் குறித்த திகதியில் நடத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய நூலக ஆவணச் சேவைகள் சபையில் மார்ட்டின் விக்கிரமசிங்க மக்கள் வாழ்வு மற்றும் இலக்கியக் கலைக்கூடத்தின் சிறப்புக் கலையரங்கைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், பொறுப்பற்ற அறிக்கைகள் மூலம் நாட்டை குழப்புவதற்கு ஜனநாயக அரசாங்கமோ அல்லது நாடாளுமன்றமோ இடமளிக்காது என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன,

“தேர்தல் குறித்த அரசின் நிலைப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்குள் தயார் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். அரசும் அறிவித்துள்ளது” என்றார்.

தேர்தல் விதிகளை மாற்றுவதற்கு மிகவும் கடினமான மூன்றில் இரண்டு பங்கு முறை உள்ளது.  அதற்கான அமைப்பு அரசியலமைப்பில் உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, பொதுத் தேர்தல். பின்னர் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிலர் பொறுப்பில்லாமல் பல்வேறு விஷயங்களை அறிவிக்கிறார்கள். எந்தச் சூழலிலும் விவாதிக்கப்படாத, நாட்டுக்கு இடையூறு விளைவிக்கப் பொறுப்பேற்காமல், திடீர் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஜனநாயக அரசோ, நாடாளுமன்றமோ அனுமதிக்காது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இது அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்தும்” என்றார்.

Exit mobile version