Site icon Tamil News

இலங்கையின் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி உத்தரவு!

மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீனவ மக்களுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் மூலம் பல நாள் மற்றும் ஒரு நாள் கப்பல் பயணங்களுக்கு எரிபொருள் மானியம் மாதந்தோறும் வழங்கப்படும்.

மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தடைபட்ட மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதுடன், உற்பத்தி செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version