Site icon Tamil News

விரைவில் ஜனாதிபதித் தேர்தல் : சஜித் அணியுடன் கைகோர்க்கும் ஜீ.எல்.பீரிஸ்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது குழுவினர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 17 க்கு இடையில் நடத்தப்பட வேண்டும் என்றும் புதிய ஜனாதிபதி நவம்பர் 17 க்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்றும் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடம் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் தொடக்கத்தில் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு கடமைப்பட்டிருப்பதாகவும், இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாவிட்டால், நவம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கம் அதற்கு இணங்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஜி. எல். பீரிஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏனைய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version