Site icon Tamil News

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் என்பது அணிகளைத் தேர்ந்தெடுப்பது அல்ல: ரணில் விக்கிரமசிங்க

தமக்கு ஆதரவளிக்க உறுதியான அணி இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தல் என்பது தேசத்தை வழிநடத்தும் நபரைத் தேர்ந்தெடுப்பதே ஆகும்.

“ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் அணிகளைத் தெரிவு செய்யாதீர்கள். பொதுத் தேர்தலில் ஒரு நல்ல அணியைத் தெரிவு செய்யலாம். பொதுத் தேர்தலில் ஒரு நல்ல அணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள் என்று மத்துகமவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒரு ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரை மட்டுமே பிரதமராக நியமிக்க வேண்டும். பின்னர் அவர் பிரதமருடன் இணைந்து அமைச்சரவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எதிர்கால அரசாங்கத்தின் கீழ் ஊழலில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version