Site icon Tamil News

இலங்கையில் ரூபாவை மேலும் வலுவடையச் செய்ய ஜனாதிபதி ரணில் நடவடிக்கை

இலங்கையில் ரூபாவை மேலும் வலுவடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டத்தை அடுத்த வருடத்தில் முடிவுக்குக் கொண்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, ரூபாவை மேலும் வலுவடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்கக் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

இறுதியில் நிவாரணம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version