Site icon Tamil News

ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுத்த இலங்கை ஜனாதிபதி

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் ஆயுதம் தாங்கிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தமது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் முதல் தடவையாக பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினரை அழைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version