பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அவரது எதிர்பாராத இந்த பயணம் பங்கேற்பாளர்களை மகிழ்வித்தது.
ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியானது இலங்கையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்,
இது தினமும் பெரும் கூட்டத்தை ஈர்க்கிறது.