Tamil News

3 குதிரைகளில் தனியாக தெரியும் விஜய்… புகழ்ந்து தள்ளிய பிரசாந்த் பட இயக்குநர்

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி மும்முரமாக நடந்துவருகிறது. படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சித்திரை திருநாளை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி வெளியானது.

இந்தச் சூழலில் பிரசாந்த்தை வைத்து ஸ்டார், ஜோடி படங்களை இயக்கிய பிரவீன் காந்தி விஜய் குறித்து பேசியிருக்கிறார்.

குறிப்பாக பிரவீன் காந்தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து பேசும்போது,

“தனியாக ஓடி வெல்வது பெரிய விஷயமே கிடையாது. ஆனால் மூன்று குதிரைகள் அதுவும் சரியான குதிரைகள் ஓடும்போது அதில் தனியாக தெரிவதுதான் சிறப்பு.

இந்தியாவின் சிறந்த நடன கலைஞர் பிரபுதேவா ஆடும்போது அவரையும் தாண்டி விஜய் தனது நடன திறமையால் ரசிகர்கள் தன்னை ஃபோக்கஸ் செய்யும் அளவும் டான்ஸ் ஆடியிருக்கிறார்.

அது மிகப்பெரிய விஷயம். பிரபுதேவாவும், பிரசாந்த்தும் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர்கள். அவர்களுடன் இணைந்து சிறப்பாக நடனம் ஆடி தன்னுடைய பலம் என்னவென்பதை காட்டியிருக்கிறார்” என்றார்.

Exit mobile version