Tamil News

வித்தியாசமாக புரொமோஷன் செய்த பிரஷாந்த்… இறுதியில் 2,000 ரூபாய் அபராதம்

‘அந்தகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் பிரசாந்த். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு நடிகர் பிரசாந்த் புரமோஷன் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்காக ஒரு யூடியூப் சேனலுக்கு வித்தியாசமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

அந்தப் பேட்டிதான் அவருக்கு வில்லங்கமாக மாறிவிட்டது. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிக்கொண்டே பேட்டி கொடுத்தது தான் பிரச்சினைக்குக் காரணம்.

பிரசாத் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே, பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் கேள்விக்கு பதில் அளிக்கிறார்.

இரண்டு பேருமே ஹெல்மெட் போடவில்லை. இந்தப் பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சாலையில் இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதைப் பார்த்த சென்னை போக்குவரத்து போலீசார் பிரசாந்த் மற்றும் அவரிடம் பேட்டி எடுத்த தொகுப்பாளர் இரண்டு பேருக்கும் ரூ.2000 அபரதாம் விதித்துவிட்டனர்.

Exit mobile version