Site icon Tamil News

பிலிப்பைன்ஸில் உள்ள லூசோன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

பிலிப்பைன்ஸில் உள்ள லூசோன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கமானது நேற்று (04.12)  6.2 ரிக்டர் அளவில் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் மணிலாவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ராய்ட்டர்ஸ் சாட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பிலிப்பைன்ஸில் அமைக்காலமாக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version