Site icon Tamil News

அக்காவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் பிரபலம்!

ஒவ்வொரு வாரமும் டிஆர்பி-யில் பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தற்போது கண்ணன்- ஐஸ்வர்யா செய்த வேலையால் கதிரை போலீஸ் கைது செய்துள்ளது. இதனால் அண்ணன் தம்பிகள் சேர்ந்து நகைநட்டை எல்லாம் விற்று 5 லட்சத்தை ரெடி பண்ணி இப்போது கதிரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல வருடங்களாக ஜீவா-மீனா தம்பதியரின் குழந்தைக்காக நடித்து வரும் கயல் பாப்பா தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக அவருடைய அம்மாவை பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி உள்ளார்.

கயலாக நடிக்கும் ஹாசினி இப்போது பள்ளிக்கு செல்வது போல் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த கேரக்டருக்கு ஹாசினி சரியாக பொருந்தாததால் ஹாசினியின் அக்காவே கயல் கேரக்டரில் தொடர உள்ளாராம். கயலின் அக்காவும் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

அதனால் அவர் தான் இனிமேல் கயல் பாப்பாவாக நடிக்க போகிறாராம். இருப்பினும் தொடர்ந்து இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கயலின் க்யூட் பர்பாமன்ஸை இனி பார்க்க முடியாதே என வருத்தம் அடைந்துள்ளனர்.

Exit mobile version