Site icon Tamil News

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும்: போப் பிரான்சிஸ் அழைப்பு

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை போப் பிரான்சிஸ் புதுப்பித்துள்ளார் .

உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கான எனது வேண்டுகோளை நான் புதுப்பிக்கிறேன். இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் ஏற்பட்ட இந்தப் பெரும் துன்பம் நீங்கட்டும் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துளளார்,

அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.

அக்டோபர் 7 முதல் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை குண்டுவீச்சு பிரச்சாரத்தில் 18,200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், பெரும்பான்மை குழந்தைகள், 51,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

Exit mobile version