Site icon Tamil News

தேர்தல் பரபரப்பிற்கு மத்தியில் இலங்கையை விட்டு வெளியேறும் பிரபலங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று இரவு 06.00 மணி முதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியாவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கும் சென்றுள்ளனர்.

இத்தே கந்தாவின் சத்தாதிஸ்ஸ தேரர் ஹொங்கொங் சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி திருமதி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் இன்று டுபாய் சென்றுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால் டுபாய் வழியாக அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version