Site icon Tamil News

கடையில் பொருத்தப்பட்டிருந்த பல்பைத் திருடி பேன்ட் பாக்கெட்டில் போட்ட பொலிஸ்காரர்…!

உத்தரப்பிரதேசத்தில் சீருடை அணிந்த பொலிஸ்காரர் ஒருவர், கடையில் எரிந்து கொண்டிருந்த பல்ப்பை திருடும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் சிக்கந்தபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு பொலிஸ்காரர் ஒருவர் தான், இப்போது இந்தியா முழுவதும் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளார்.

ஒரு கடையின் வெளியே எரிந்து கொண்டிருந்த பல்ப் ஒன்றை சீருடை அணிந்த பொலிஸ்காரர், வேகமாக ஏறி திருடி தனது பேன்ட் பாக்கெட்டில் வைக்கிறார். அத்துடன் எதுவும் நடக்காதது போல செல்போனில் பேசிக் கொண்டு போகிறார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இந்த திருட்டுச் சம்பவம் ஏப்ரல் 20ம் திகதி நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ வெளியானதைக் கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Exit mobile version