Tamil News

சீன பெண்ணின் மீது தாக்குதல்: இருவரை கைது செய்த பொலிஸார்

உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த சீனப் பெண்ணை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த அலைபேசியை அபகரிக்க முயன்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு சந்தேகநபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி ஓடும் உடரட்ட மெனிகே ரயிலில் இருந்து அலைபேசியூடாக ஞாயிற்றுக்கிழமை (06) வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சீனப் பெண்ணை தடியால் தாக்கிய இரு சந்தேக நபர்களை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லியு குயின் என்ற சீனப் பெண், தனது கணவர் மற்றும் மகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, சுற்றுலா வழிகாட்டி ஒருவருடன் எல்ல ரயில் நிலையத்திற்கு (06) பயணித்த போது, ​​ஜன்னலுக்கு வெளியே தனது கைத்தொலைபேசியில் அழகிய இடங்களை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.நாவலப்பிட்டி, இகுருஓயா நிலையத்தை ரயில் அண்மித்த போது ரயில் தண்டவாளத்துக்கு அருகில் நின்றிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர், வீடியோ படம் பிடித்துக்கொண்டிருந்த பெண்ணை நீண்ட தடியால் தாக்கியுள்ளார்.

அந்த இளைஞர்கள் அவளை அடிக்கும் காட்சிகள் அவரது அலைபேசியில் பதிவாகியுள்ளது, மேலும் அடித்ததில் அப்பெண்ணின் கையில் காயம் ஏற்பட்டது.பின்னர், சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டிக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சீன மொழியில் தனது முறைப்பாட்டை பதிவு செய்து, அதனை சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்து, கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்த முறைப்பாட்டையும், பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு WhatsApp ஊடாக அனுப்பி வைத்துள்ளார்.

நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹரேந்திர களுகம்பிட்டிய, பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாவலப்பிட்டி இகுரு ஓயா புகையிரத நிலையத்திற்குச் சென்று சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்ய முடிந்தது.மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

HRCSL launch an Investigation over Hambantota Port Police - slcat

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாவலப்பிட்டி இகுருஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 22-24 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், சந்தேகநபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் அறியமுடிகின்றது.சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பாக வாட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் சீன பெண் பொலிஸாருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தால் பதிக்கப்பட்ட சீன பெண்ணான லியு கின் கூறுகையில். நானும் எனது கணவரும் மகளும் இம்முறை பயணத்திற்காக இலங்கை வந்தோம். நாங்கள் ரயிலில் சென்றபோது, ​​​​நான் ஜன்னலுக்கு வெளியே அற்புதமான இயற்கைக்காட்சிகளையும் நட்பு மனிதர்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன் ரயிலுக்கு வெளியே இருந்த மூன்று பேரில் ஒருவர் எனது தொலைபேசியைப் பிடுங்க, நீண்ட மரக் குச்சியால் என் முழங்கையில் பலமாக அடிக்க முயன்றார், ஆனால் அவர்கள் தோல்வியுற்றனர், அவர்களின் படங்கள் எனது தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டன. இப்போது என் கையில் காயம் மற்றும் நீல நிறத்தில் உள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, இலங்கையின் சுற்றுலா வழிகாட்டியான வினு, எனது காயங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, எனது குடும்பத்தினருக்கும் எனது உணர்வுகளுக்கும் ஆறுதல் அளித்து, சூழ்நிலையை சாதகமாக கையாண்டார். மூன்று பேரையும் கைது செய்வதற்காக ஒருங்கிணைந்த ரயிலின் பணியிலிருந்த மேலாளரையும் காவல்துறையினரையும் அழைக்க அவர் பலமுறை எனக்கு உதவினார். குறிப்பாக சுற்றுலா வழிகாட்டி, சிக்கலைத் தீர்க்க மிகவும் உறுதியுடன் இருந்தார் மற்றும் முழு செயல்முறையையும் முன்கூட்டியே மற்றும் திறமையாக கையாண்டார். அதே நாள் மாலைக்குள், பொலிஸார் ஒருவரைக் கைது செய்ததாகவும், பொலிஸ் மிகவும் திறமையாக இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

நானும் எனது குடும்பத்தினரும் இலங்கையை மிகவும் நேசிக்கிறோம், இந்த நாடும் மக்களும், ஒவ்வொரு சிரிக்கும் முகமும், ஒவ்வொரு காற்றும் நம்மைத் தொடுகிறது. எப்போதாவது நடக்கும் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் இலங்கை பற்றிய எனது நல்ல உணர்வை பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன். இந்தச் சம்பவம் தீர்க்கப்பட்டு, இலங்கை முன்னேறிச் சிறப்பாக வளர்ச்சியடையும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version