Site icon Tamil News

பாரியளவான போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

கணிசமான போதைப்பொருளுடன் 30 வயதுடைய நபர் ஒருவர் கடுவெல பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபர் 15 கிலோ 81 கிராம் ஐஸ் போதைப்பொருள், 14 கிலோ 527 கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 941 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவத்தை பிரதேசத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் அவர் வாழ்ந்த வீடு மற்றும் காரினை சோதனை செய்தபோதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Exit mobile version