Site icon Tamil News

பற்றி எரியும் போலந்தின் வணிக வளாகம் : 50 மீட்பு குழுக்கள் குவிப்பு!

போலந்தின் தலைநகரில் உள்ள பியாலோலேகா மாவட்டத்தில் வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தி மேரிவில்ஸ்கா 44 ஷாப்பிங் வளாகத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 80 சதவீதமான பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரசாயன மற்றும் சுற்றுச்சூழல் மீட்பு நிபுணர்கள் உட்பட 50 குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

தீ விபத்தை தொடர்ந்து   ஜன்னல்களை மூடிக்கொண்டு வீட்டில் இருக்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், விபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version