Site icon Tamil News

கலிபோர்னியாவில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் இந்தியர்களுக்கு எதிரான சுலோகங்களை எழுதிய விஷமிகள்!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் நெவார்க் நகரில் ஒரு இந்து கோவிலின் வெளிப்புற சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான மற்றும் கலிஸ்தானிக்கு ஆதரவான ஸ்லோகங்கள் எழுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

X தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்துக்களுக்கான எதிரான வாசகங்கள் எழுத்தப்பட்டுள்ளதை காட்டியுள்ளன.

குறித்த வாசகங்களில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் பெயரும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இதுவொரு வெறுக்கத்தக்க செயல் என அமெரிக்க கட்டளை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை வெறுப்புக் குற்றமாக விசாரிக்குமாறு நெவார்க் காவல்துறையை அறக்கட்டளை வலியுறுத்தியது.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று நெவார்க் போலீசார் உறுதியளித்துள்ளனர்.

Exit mobile version