Site icon Tamil News

‘மணிப்பூர் விவகாரம் பற்றி பேச பிரதமர் மோடி விரும்பவில்லை’ – மல்லிகார்ஜுன் கார்கே

” பிரதமர் மற்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்கிறார், ஆனால் அவர் எங்களுக்கு பதிலளிக்கவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து பேச பிரதமர் மோடி விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் இது குறித்து விவாதிக்கத் தயாராக இல்லை என்பது போல குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆனால் நாங்கள் கடந்த 11 நாட்களாக இந்த விவகாரம் குறித்து விவாதிக்க காத்திருக்கிறோம்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே எவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் கூறியதாவது,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ஆம் திகதி தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் நாடாளுமன்றம் இன்று வரை முடங்கியுள்ளது. இதனிடையே மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Exit mobile version